ரஷ்ய அதிபர் புடின் மீது நம்பிக்கை இழந்த பெருமளவான மக்கள்!
உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தேர்வு ஆனார். இது தொடர்பான கருத்துக்கணிப்பு ஆய்வு, 18 நாடுகளில் நடத்தப்பட்டது.
பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய கருத்துக்கணிப்பு ஆய்வின்படி, பல நாடுகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.
18 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், சராசரியாக 90 சதவீத மக்கள், உலக விவகாரங்களில் புடின் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்று தங்களுக்கு நம்பிக்கை இல்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
#Putin became most unpopular leader in the world. His policies were denounced by 90% of those surveyed in 18 countries
— NEXTA (@nexta_tv) June 22, 2022
The respondents' attitudes toward Russia have also changed. In 18 countries, 85% of surveyed expressed a negative opinion about #Russia.
?Pew Research Center pic.twitter.com/7eFEX6mYet
கிட்டத்தட்ட பத்தில் எட்டு பேர் (78%) புடின் மீது நம்பிக்கை இல்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினர். 18 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், 85 சதவீதம் பேர் ரஷ்யாவைப் பற்றி எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி கடந்த இருபது ஆண்டுகளாக, புடின் மீதான மதிப்பீடு பல நாடுகளில் கீழ்நோக்கிய போக்கில் உள்ளன.
ஆனால் 2022 இல், உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு பின்னர், இந்த எண்ணிக்கை மிகக் குறைந்த அளவை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.