அட்லாண்டிக் பெருங்கடலில் மாபெரும் கடற்பாசிப் படலம் ; சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை
அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 8,500 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ள மாபெரும் கடற்பாசிப் படலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு, NASA-வின் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளின் தகவலின்படி, வரலாற்றில் பதிவாகியுள்ள கடற்பாசி வளர்ச்சிகளில் இது இரண்டாவது மிகப்பெரிய கடற்பாசிப் படலமாகக் கருதப்படுகிறது.
இந்த கடற்பாசிகள் கடற்கரைகளில் கரை ஒதுங்கும்போது கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், கடல் வாழ் உயிரினங்கள், கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பகுதிகளின் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த கடற்பாசிப் படலத்தின் வளர்ச்சி மற்றும் நகர்வை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், கடலோர நாடுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.