May 9; சிவப்பு சதுக்கத்தில் நடக்கப்போவது என்ன?
May 9 ஆம் திகதி மாஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் வருடாந்திர இராணுவ அணிவகுப்பு இந்த ஆண்டு ஒரு புதிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
1945 இல் நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் வெற்றியை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் இராணுவ ஊர்வலங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் இரண்டு மாதங்களாகத் தாக்குதலைத் தொடர்கின்ற நிலையில் , உக்ரைன் நகர வீதிகளில் ரஷ்யாவின் பீரங்கி டாங்கிகள் வியாபித்துள்ளன.
இந்த நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அடுத்த நகர்வு குறித்து ஊகங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதேவேளை, இந்த வார தொடக்கத்தில் மாஸ்கோவில் போர் விமானங்களும் குண்டுவீச்சு விமானங்களும் கர்ஜித்தன. எனினும் இது ஒரு ஒத்திகை மட்டுமே - வெற்றி தினத்தை குறிக்கும் வகையில் ஒரு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மே ஒன்பதாம் திகதி ரஷ்ய நாட்காட்டியின் மிக முக்கியமான விடுமுறை நாட்களில் ஒன்றாகும். ஏனெனில் அன்றுதான், 1945 இல் நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் வெற்றியை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் இராணுவ ஊர்வலங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு மே 9 ஆம் திகதி நிகழ்வுகள் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.