கனேடிய மாகாணம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு... பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
கனேடிய மாகாணம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்றில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கனேடிய மாகாணமான Saskatchewanஇல் துப்பாக்கிச்சூடு ஒன்று நடத்தப்பட்டதாக தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கப்படும் 33 வயது நபர் ஒருவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
இது தொடர்பாக அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ள பொலிசார், பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்குமாறும், ஜன்னல் அருகில் நிற்கவேண்டாம் என்றும், பொலிசாரைத் தவிர வேறு யாராவது கதவைத் தட்டினால் திறக்கவேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், வாகனத்தில் செல்லும்போது யாரேனும் லிப்ட் கேட்டால் கொடுக்கவேண்டாம் என்றும் அவர்கள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.