ஆண்கள் கட்டாயம் இரு திருமணம் செய்ய வேண்டும்....மறுத்தால் சிறை
ஆப்பிரிக்கா நாடான எரித்திரியாவில் ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விநோத சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எரித்திரியாவில் நீட நாட்களாக போர் நடந்து வருகின்றன. இதன் விளைவாக அங்கு ஆண்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்த மாறாக பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக பெண்களின் பாதிக்கப்பிற்காக ஆண்கள் கட்டாயம் இரு திருமணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் இரண்டு திருமணங்கள் செய்ய மறுக்கும் ஆண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அத்துடன் முதல் மனைவி அவரது கணவரின் இரண்டாவது திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தாலும் அவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரித்திரியன் அரசாங்கத்தின் இந்த முடிவு உலகம் முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.