காஷ்மீரில் சமூக ஆர்வலர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் 45 வயது சமூக ஆர்வலர் ஒருவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சமூக ஆர்வலர் குலாம் ரசூல் மாக்ரேயின் வீட்டிற்குள் நேற்று இரவு (26) தீவிரவாதிகள் நுழைந்து அவரை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரசூலைக் கொன்ற தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்களின் வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த நான்கு நாட்களில், 2,000 க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.