ரொறன்ரோவில் உயிர்ப்பலி வாங்கும் முதியோர் இல்லங்கள்: பகீர் தகவல் வெளியிட்ட ராணுவம்
கனடாவில் கொரோனா முதல் அலையின் போது ரொறன்ரோவில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் சுமார் 2 டசின் குடியிருப்பாளர்கள் பலியானதாக ராணுவம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மேலும், சில முதியோர் இல்லங்களில் தரை மற்றும் சுவரில் மலம் மற்றும் வாந்தி காணப்பட்டதாகவும் ராணுவ அறிக்கையில் கூறப்படுகிறது.
ரொறன்ரோவில் அமைந்துள்ள குறிப்பிட்ட இரு முதியோர் இல்லங்களில், கண்ட காட்சிகள் நெஞ்சை உலுக்கும் வகையிலும், அச்சத்தை தரும் வகையிலும் இருந்துள்ளதாக ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளை கண்டுகொள்ள எவரும் இல்லை என்பது மட்டுமல்ல, பலர் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலவீன நிலையில் மரணமடைந்துள்ளதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் உள்ள 7 நீண்ட கால முதியோர் இல்லங்களை பராமரிக்கும் பொருட்டு ஏப்ரல் 2020ல் கனேடிய ராணுவம் அழைக்கப்பட்டனர். ஆனால், ஏப்ரல் 28 வரையிலும் ராணுவம் தங்கள் பணிகளை துவங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி ஒரு நீண்ட கால முதியோர் இல்லத்தில், இராணுவத்தின் வருகைக்கு முன்னர் நீரிழப்பின் விளைவாக 26 குடியிருப்பாளர்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய ஊழியர்கள் இல்லாததே முதியோர் இல்லங்களில் உயிரிழப்புகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல், கனடாவில் நீண்ட கால முதியோர் இல்லங்களில் மொத்தமாக 3,931 குடியிருப்பாளர்கள் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.