பைசர் தடுப்பூசி தொடர்பில் கனடா வெளியிட்ட முக்கிய தகவல்
இந்த வாரத்தில் மட்டும் கனடா 2 மில்லியன் டோஸ் பைசர் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள கூடும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் திட்டமிடப்பட்டதை விட அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை முன்னதாக வழங்கியது.
இந்த நிலையிலேயே பைசர் நிறுவனத்திடம் இருந்து இந்த வாரத்தில் 2 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் வழங்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாடர்னா தடுப்பூசியின் அடுத்த தொகுப்பானது எதிர்வரும் வாரத்தில் வருவதாக தகவல் இல்லை. மட்டுமின்றி, அஸ்ட்ராசெனெகா அல்லது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் எப்போது முதல் கனடாவில் கிடைக்கும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
இதனிடையே இந்தியாவில் இருந்து அஸ்ட்ராசெனெகா தயாரிப்பு தடுப்பூசிகளின் 650,000 டோஸ்கள் கனடாவுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் நிலைமை மிக மோசமாக இருப்பதால், அங்கிருந்து தடுப்புசிகள் எப்போது வரும் என உறுதியான தகவல் இல்லை என கூறப்படுகிறது.
கனடாவில் வெள்ளிக்கிழமை வரை சுமார் இரண்டு மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் பன்னிரண்டு பேர்களுக்கு ரத்தக்கட்டிகள் பிரச்சனை உறுதி செய்யப்பட்டன. மூன்று பேர் இறந்துள்ளனர்.