40 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வை அறிவித்த கனேடிய மாகாணம்
2022 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு $2 என அதிகரிக்க இருப்பதாக கனடாவின் நியூ பிரன்சுவிக் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த 17 சதவீத ஊதிய உயர்வானது கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறை என கூறப்படுகிறது. திட்டமிட்டபடி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஒரு மணி நேரத்திற்கு $1 அதிகரிப்பு செய்யப்படும் எனவும் அக்டோபரில் ஒரு மணி நேரத்திற்கு $1 அதிகரிப்பு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாகாணத்தின் குறைந்தபட்ச ஊதியமானது ஒரு மணி நேரத்திற்கு $13.75 என அதிகரிக்கும். நியூ பிரன்சுவிக் மாகாண மக்கள் மாத இறுதியில் அதிக நிதி நெருக்கடியில் இருந்து வருவதாகவும், தற்போதைய ஊதிய உயர்வு அதற்கான தீர்வாக அமையும் எனவும் மக்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நியூ பிரன்சுவிக் மாகாணமானது தற்போது நாட்டிலேயே மிகக் குறைவான குறைந்தபட்ச ஊதியத்தைக் கொண்டுள்ளது. எஞ்சிய அட்லாண்டிக் மாகாணங்களில் உள்ள விகிதங்களைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவுகளில் குறைவாகவும் உள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வானது, மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் சுமார் 15,500 ஊழியர்களுக்கு உதவியாக இருக்கும்.
மட்டுமின்றி, மணிக்கு 13.75 கனேடிய டொலருக்கும் குறைவாக ஊதியம் பெறும் சுமார் 30,000 மக்களும் இந்த ஊதிய உயர்வால் பலனடைவார்கள்.