மினியாபொலிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மினபொலிஸ் நகரில், நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 8 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் துப்பாக்கிகளின் பயன்பாடும், துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அமெரிக்காவில் அதிகரித்து வருகின்றன.
ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பும், இது போன்ற குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில், நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 8 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக, 23 வயதான இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இரு நபர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் துப்பாக்கிச் சூட்டிற்கு வழி வகுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.