பிராம்ப்டனில் மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்
சனிக்கிழமை முதல் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 50 வயது கடந்த நபரை பத்திரமாக மீட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எக்ளிண்டன் அவென்யூ வெஸ்ட் மற்றும் நூற்றாண்டு பூங்கா பவுல்வர்டு பகுதியில் காலை 11 மணியளவில் குறித்த நபர் தங்கியிருந்த ஹொட்டலில் இருந்து வெளியேறிய நிலையில், அதன் பின்னர் அவர் தொடர்பில் தகவல் ஏதும் இல்லை என கூறப்பட்டது.
மாண்ட்ரீலைச் சேர்ந்த அந்த நபர், முதுமை காரணமாக ஏற்படும் மறதி மற்றும் அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
தகவல் தெரிய வந்ததும் பொலிசார் பீல் பிராந்திய எல்லை அருகே தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில், பிராம்ப்டனில் இருந்து சுமார் ஐந்து கிலோமீற்றர் தொலைவில் அந்த நபரை பீல் பொலிசார் கண்டுபிடித்தனர்.
குறித்த நபர் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் காணப்பட்டதாகவும், உடனடியாக அவரை அழைத்து வந்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எங்களைத் தொடர்பு கொண்ட பொதுமக்களின் எந்தவொரு முயற்சிகளுக்கும், பீல் பிராந்திய காவல்துறையின் முயற்சிகளுக்கும் இந்த விவகாரத்தில் நன்றி கூறுவதாக ரொறன்ரோ காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஆண்டி சிங் தெரிவித்துள்ளார்.