மாயமான பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர்: கவலையில் குடும்பம்
சால்ட் ஸ்பிரிங் தீவில் புதன்கிழமை முதல் மாயமான பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் தொடர்பில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சால்ட் ஸ்பிரிங் பொலிசார் தெரிவிக்கையில், பேராசிரியர் சினிகா கே எலியட் புதன்கிழமை தமது வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் எனவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
அவர் மாயமான அதே நாளில் தங்களுக்கு புகார் கிடைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் புதன்கிழமை இரவு பேராசிரியரின் வாகனம் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுத்துள்ளனர்.
பேராசிரியர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து அதிக உதவிகள் கிடைத்துள்ளதாகவும், தேவை எனில் மேலும் உதவி கோரப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பேராசிரியர் எலியட் 2007 முதல் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.