வீடு புகுந்து கடத்தப்பட்ட கனேடிய பெண்: இந்திய வம்சாவளி இளைஞர்களுக்கு தொடர்பு?
கனடாவின் ரிச்மண்ட் ஹில் பகுதியில் பெண் ஒருவரை தாக்கியதாக கூறி முன்னெடுக்கப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் யோர்க் பொலிசார் வெளியிட்ட தகவலில், டிசம்பர் 20ம் திகதி 2021ல் சுரங்க ரயில் வாகன நிறுத்துமிடத்தில் பெண் ஒருவர் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள், 37 வயதான Elnaz Hajtamiri என்பவரை ஆண்கள் இருவர் தாக்கிவிட்டு மாயமானதாக தெரிந்துகொண்டனர். பொதுமக்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டதாலையே, அந்த தாக்குதல்தாரிகள் மாயமானதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பிராம்ப்டன் பகுதியில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதில், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 23 வயது ரியாசத் சிங் என்பவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு தாக்குதல்தாரி 24 வயதான ஹர்ஷ்தீப் பின்னர் ஏற்கனவே கைதாகியிருந்தார்.
பொலிசார் தரப்பில் மேலும் தெரிவிக்கையில், இவர்கள் இருவரும் தாக்குதலை முன்னெடுத்த பின்னர், ஜனவரி 12ம் திகதி வீடு புகுந்து மூவர் குழுவால் Elnaz Hajtamiri கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட Elnaz Hajtamiri தொடர்பில் இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை என்றே கூறப்படுகிறது.