லண்டனில் காணாமல் போன பெண்; ட்விட்டரில் பதிவிட்ட பொலிசார்
பிரிட்டனில் காணாமல் போன பெண்ணை கண்டுப்பிடிப்பதற்காக பொலிசார் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள பார்னெட் பகுதியை சேர்ந்த 41 வயதான கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூ என்பவர் அவரின் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்
. இது குறித்து அப்பகுதி பொலிசார் தகவல் தெரிவித்துள்ளதுடன், தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.
அதில் "41 வயதான கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூ அவரின் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவரை கண்டுப்பிடிக்க பொது மக்களின் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது. மேலும் யாராவது கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூவை பார்த்தாலோ அல்லது அவர் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தாலோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக Metropolitan பொலிஸ் இணையதளத்தில் நீங்கள் ஒருவரை காணவில்லை என்று தெரிவிக்க ஒரு நாள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதிலும் உங்களது அன்புக்குரியவர்களை பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்" என்றும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.