கனடாவை உலுக்கிய சம்பவத்தில் முக்கிய திருப்பம்: சிக்கிய இளைஞர்
கனடாவின் மிசிசாகாவில் நகைக் கொள்ளை தொடர்பாக ரொறன்ரோ இளைஞர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், மே 11ம் திகதி பகல் சுமார் 5.30 மணியளவில் முகமூடி அணிந்த நால்வர் கும்பல் ஒன்று எரின் மில்ஸ் பார்க்வே மற்றும் எக்லின்டன் அவென்யூ பகுதியில் உள்ள நகைக்கடையில் நுழைந்துள்ளது.
இந்த நிலையில், திடீரென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி, நகை மற்றும் பணத்துடன் தப்பியுள்ளனர். இந்த நிலையில், அந்த கும்பலில் ஒருவரை துரிதமாக செயல்பட்ட பொலிசார் ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர்.
24 வயதான ரொறன்ரோவைச் சேர்ந்த ஹாரிஸ் மொஹமத் என்பவர் மீது துப்பாக்கியால் மிரட்டி கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தற்போது வழக்குகளை பதிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, அந்த கும்பலில் எஞ்சிய மூவரையும் தீவிரமாக தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தேடப்பட்டுவரும் மூவரும் 17 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், இவர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.