கனடாவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

Kamal
Report this article
கனடாவின் மிஸிஸாகா பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீல் பிராந்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளார்னர்.
துப்பாக்கிச் சூடு இடம் பெற்றதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
பாடசாலை ஒன்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சில மணி நேர போராட்டத்தின் பின்னர் குறித்த நபரை பாதுகாப்பான முறையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபருக்கு உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.