ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மொடல் உயிரிழப்பு
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரித்தானிய இளம் மொடல் ஒருவர், மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பிரித்தானிய மொடலான Stephanie Dubois (39), சைப்ரஸ் தீவில் வாழ்ந்துவந்தார்.
அவர் இம்மாதம் (மே மாதம்) 6ஆம் திகதி Stephanie ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட Stephanie, மே 14ஆம் திகதி, உடல் முழுவதும் நடுங்குவதாகவும், மூட்டுக்களை அசைக்கமுடியவில்லை என்றும், தலை சுற்றல் இருப்பதாகவும், தலை வலி இருப்பதாகவும், மூச்சுவிட கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஒருவேளை தனக்கு கொரோனா தொற்றியிருக்குமோ என்று எண்ணி, கொரோனா பரிசோதனை செய்தபோது, பரிசோதனை முடிவுகள் அவருக்கு கொரோனா இல்லை என்றே கூறின. அதன்பின்னர், மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமாவுக்குச் சென்ற Stephanie, கடந்த சனிக்கிழமை உயிரிழந்துவிட்டார்.
இளம் மொடலான Stephanieயின் திடீர் மரணத்தால் அவரது நண்பர்கள், சக மொடல்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை, Stephanieயின் உயிரிழப்புக்குக் காரணம் ஆஸ்ட்ராசெனகா தடுப்புசிதானா என்பதைக் கண்டறிய சைப்ரஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.