சிங்கப்பூர் வந்த பிரிட்டன் பிரஜைக்கு குரங்கம்மை
சிங்கப்பூர் வந்த, பிரிட்டனைச் சேர்ந்த 42 வயது விமான ஊழியர் ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது தெரியவந்துள்ளது.
இம்மாதம் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் திகதி வரை சிங்கப்பூரில் இருந்த பின்னர் அவர், 19-ஆம் திகதி சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.. இதனையடுத்து அவர் தற்போது தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் சீரான நிலையில் உள்ளதாகச் சுகாதார அமைச்சு கூறியது. அதோடு அடையாளம் காணப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 13 பேர், 21 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
அதேசமயம் அவருடன் அவ்வளவு நெருங்கிய தொடர்பில் இல்லாத இருவர், தொலைபேசி மூலம் கண்காணிக்கப்படுவர்.
இந்நிலையில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர் சிங்கப்பூரில் பெரும்பாலும் ஹோட்டலில் தங்கி இருந்ததால் கிருமி உள்ளூரில் பரவுவதற்கான அபாயம் குறைவே எனச் சுகாதார அமைச்சு கூறியது.