குரங்கம்மை நோய்... கனேடியர்களுக்கு ஆபத்தா? அதிகாரிகள் விளக்கம்
உலகம் முழுவதும் பரவும் குரங்கம்மை நோய் அசாதாரணமானது என குறிப்பிட்டுள்ள நிலையில், கனேடியர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறைவு என்று நாட்டின் உயர்மட்ட மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குரங்கம்மை நோயானது ஆபிரிக்கா தொடங்கி, தற்போது அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் கியூபெக்கில் ஐவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி சில டசின் மக்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மட்டுமின்றி, கனடாவில் தற்போது கண்காணிப்பில் இருக்கும் நோயாளிகள் பெரும்பாலும் கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதி மக்களே எனவும் கூறுகின்றனர்.
ஆபிரிக்காவுக்கு வெளியே பல நாடுகளில் இந்த நோய் உறுதி செய்யப்படுவது அசாதாரணம் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், கியூபெக்கில் தற்போது 20 பேர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்ட பிறகு பிறந்த பல கனேடியர்கள் குரங்கம்மை காய்ச்சலுக்கு ஆளாகலாம் என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு டசின் ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்படுவதாக WHO மதிப்பிட்டுள்ளது.
காங்கோவில் ஆண்டுதோறும் 6,000 பேர்களுக்கு குரங்கம்மை உறுதி செய்யப்படுவதாகவும் நைஜீரியாவில் ஆண்டுக்கு 3,000 பேர்கள் இந்த தொற்றுக்கு இலக்காவதாகவும் தெரிய வந்துள்ளது.