இன்னும் மோசமான நிலையை கடக்கவில்லை: பீதி விலகாமல் கனேடிய மக்கள்
கொரோனா பாதிப்பின் மோசமான கட்டத்தை இன்னும் கடக்கவில்லை என்றே பெரும்பாலான கனேடிய மக்கள் பீதி விலகாமல் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் கொரோனா நான்காவது அலை தொடர்பில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு பல்வேறு நாடுகளில் பரவியுள்ளதுடன், மீண்டும் ஒரு கட்டுப்பாடுகள் மிகுந்த ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு அது வழிவகுத்துள்ளது.
பல நாடுகள் இதனால் இன்னமும் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்க தயக்கம் காட்டி வருகிறது. ஆனால் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெரும்பாலான கனேடிய மக்கள் கொரோனா பாதிப்பின் கொடூரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றே கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கடந்த மாதம் 63% மக்கள் கூறியிருந்த இந்த கருத்தானது தற்போது 9% சரிவடைந்து 54% என பதிவாகியுள்ளது.
மட்டுமின்றி, கொரோனா தொடர்பான ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கனேடிய அரசு தளர்த்தியிருக்க தேவையில்லை என 73% மக்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக இந்த அச்சத்தை கனேடிய மக்கள் தெரிவித்துள்ளனர்.