பிரித்தானியாவில் மேலும் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 37ஆயிரத்து 960பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 77இலட்சத்து 1ஆயிரத்து 715பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 208பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 46ஆயிரத்து 396பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 878பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 62இலட்சத்து 19ஆயிரத்து 111பேர் பூரண குணமடைந்துள்ளனர்.