காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50,000க்கும் மேற்பட்டோர் பலி
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போா், கடந்த ஜனவரியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட இருந்தது.
இதன்படி, முதல்கட்டத்தில் 42 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. போா் நிறுத்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை தொடங்கப்படாத நிலையில், நிரந்தரப் போா் நிறுத்த பேச்சுவாா்த்தைக்கு முன்பாக, கூடுதலாகப் பிணைக் கைதிகளை விடுவிக்கும் அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேல் பரிந்துரையை ஹமாஸ் ஏற்கவில்லை.
இதையடுத்து, ஒப்பந்தத்தை முறித்த இஸ்ரேல், காஸா மீதான தாக்குதலை அண்மையில் மீண்டும் தொடங்கியது.
இதுவரை 50,021 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாகவும், 1.13 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.