ரெயில் விபத்தில் 50-க்கும் மேற்பட்டவருக்கு நேர்ந்த கதி!
கிழக்கு ஈரானில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 50-க்கும் மேற்பட்டவா்கள் காயம் அடைந்துள்ளனா்.
ஈரான் தலைநகா் தெஹ்ரான் ரெயில்வே நிலையத்தில் இருந்து தபாஸ் நகரத்தை நோக்கி பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
இந்தநிலையில் அதிகாலை திடீரென நடு வழியில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 10 போ் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தனா். இதைத் தொடர்ந்து 50- க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்துள்ளனா்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசாா் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து உயிாிழப்பு மேலும் அதிகாிக்கும் என அஞ்சப்படுகிறது.
