பிரித்தானியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 42ஆயிரத்து 076பேர் பாதிக்கப்பட்டதோடு 121பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 69இலட்சத்து 04ஆயிரத்து 969பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு இலட்சத்து 33ஆயிரத்து 041பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 55இலட்சத்து 61 ஆயிரத்து 928பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 10ஆயிரம் பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,038பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.