3 வயது குழந்தையில் உயிரை பறித்த கொசு மருந்து: சோகத்தில் குடும்பத்தினர்!
3 வயது குழந்தை ஒன்று கொசுக்களை கொல்வதற்கு பயன்படுத்தப்படும் ‘ஆல் அவுட்’டை குடித்த பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பாத்திமா நகரில் இரு தினங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பல்லாவரம் வெள்ளிச்சாமி தெருவை சேர்ந்த தமிழரசன் என்பவரின் 3 வயதான கிஷோர் ஆண் குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவ தினத்தன்று இரவு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஆல் அவுட் மருத்தை தவறுதலாக குடித்திருக்கிறான். இதனைக் கண்டபெற்றோர் அருகில் இருந்த தனியார் வைத்தியசாலைக்கு குழந்தையை உடனடியாக துக்கிசென்றுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு வைத்தியசாலைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து பின்னர் எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கிருந்த வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுள்ள செல்லப்பட்ட நிலையில் கிகிச்சை பலனின்றி 3 வயது குழந்தை கிஷோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.