ஃப்ரேசர் நதியில் மிதந்த பெண்ணின் சடலம்: புகைப்படத்துடன் வெளியான தகவல்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் நான்கு மாதங்களுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த இளம் தாயாரின் சடலம் ஃப்ரேசர் நதியில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை வியாழக்கிழமை பொலிசார் உறுதி செய்துள்ளனர். Chilliwack பகுதியை சேர்ந்த 23 வயதான Shaelene Keeler Bell என்பவரையே பொலிசார் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தேடி வந்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயாரான Shaelene Keeler Bell கடந்த ஜனவரி 30ம் திகதி முதல் மாயமானார். தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்தில் மர்மம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் சிக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு உறுதி அளித்துள்ளனர். Shaelene Keeler Bell மாயமானதன் அடுத்த நாள், அவரது கார், மொபைல்போன் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டது.
மேலும், தனது இரு பிள்ளைகளையும் தோழி ஒருவரிடம் ஒப்படைவிட்டு சென்றவர் அதன் பின்னர் திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
Shaelene Keeler Bell தொடர்பில் அறிந்தவர்கள் எவரும், அவர் தமது இரு பிள்ளைகளையும் கைவிட்டு மாயாமாவார் என நம்ப மாட்டார்கள் என அவரது தாயார் அலினா கண்கலங்கியுள்ளார்.