மகளின் கண் முன்னே 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த தாய்!
பிரித்தானியாவில் தற்போது கோடை காலம் என்பதனால், பலர் கடற்கரைக்கு படை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் டோர்டல்-டோ என்னும் கடல் கரைக்கு அம்மாவும் மகளுமாக சென்றுள்ளார்கள்.
கடல் கரைக்கு அருகே பெரும் சுண்ணாம்பு கல் பாறைகள் உள்ளது. அது வழியாக இறங்கியே கீழே உள்ள கடல் கரைக்கு செல்ல முடியும் எனினும், கீழே இறங்க என பொதுவான ஒரு பாதுகாப்பான பாதை உள்ளது. எனினும் அதனை விடுத்து அவரசமாக கீழே இறங்க மிகவும் ஆபத்தான பாதை தெரிவு செய்துள்ளார் ஜபீன் என்னும் அந்தப் பெண்.
அவரது மகள் ஏற்கனவே வேகமாக கீழே இறங்கி விட்ட நிலையில் நான் வருகிறேன் என்று சத்தமாக கூச்சலிட்டுக் கொண்டு அவர் சென்ற நிலையில் திடீரென 100 அடி பள்ளத்தில் அதுவும் கற்கள் மேல் விழுந்து விட்டார்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இந்தக் காட்சிகளை அவரது மகள் மட்டும் அல்ல, பல நூறுக் கணக்கானவர்கள் பார்த்துள்ளார்கள். எனினும் யாராலும் அவருக்கு உதவி செய்ய முடியாத நிலையில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .