ஒன்ராறியோ திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
ஒன்ராறியோவில் வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகள் திறந்து செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், கண்டிப்பாக மொத்த கூட்டத்தையும் திரையரங்கினுள் அனுமதிக்க மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை முதல் திறந்து செயல்படும் திரையரங்குகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க உள்ளனர். இதனால் ஒரு திரையரங்கு வளாகத்தில் ஒட்டுமொத்தமாக 1,000 பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
ஆனால் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியேட்டர்களுக்கான ஒன்ராறியோவின் இந்த கட்டுப்பாடுகள் எந்த அடிப்படையும் இல்லாத அறிவியல் பகுப்பாய்வு என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Alberta மற்றும் Saskatchewan பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் தற்போது எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.