கனடாவில் கணவனால் முல்லைத்தீவு இளம் பெண்ணுக்கு நடக்கும் கொடுமை! பொலிஸில் முறைப்பாடு
முல்லைத்தீவை சொந்த இடமாகக் கொண்டு கனடாவில் வசித்து வரும் 34 வயதான குடும்பஸ்தர் தொடர்பில் அவரது மனைவி பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
தன்னை கடுமையாக பாலியல் சித்திரவதை செய்வதாகவும், இயற்கைக்கு மாறாக தன்னுடன் உறவு கொண்டு சித்திரவதை செய்வதாகவும் மனைவி பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
வவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணுக்கும் முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியை சேர்ந்த 34 வயதான நபருக்கும் கடந்த வருட தொடக்கத்தில் வவுனியாவில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பின்னர் இவ்வருட நடுப்பகுதியில் மனைவியை குறித்த நபர் கனடாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந் நிலையிலேயே கணவன் மீது மனைவி பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இதேவேளை தான் தற்போது கர்ப்பிணியாக உள்ளதாகவும் தனக்கு கணவனைத் தவிர யாரையும் கனடாவில் தெரியாது எனவும் ஆகவே கணவனிடம் இருந்து தன்னைப் பாதுகாக்குமாறும் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.