கொரோனா உயிரிழப்புகளுக்காக பிரேசில் அதிபர் மீது கொலை வழக்கா?
பிரேசில் நாட்டில் கொரோனவைக் கட்டுப்படுத்த தவறியதற்காக அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபர் எந்த நடவடிக்கையும் தற்போது வரையில் எடுக்கவில்லை. இந்த நிலையில் ஜெய்ர் போல்சொனாரோ மீது கொலை வழக்கு உளப்பட 13 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பரிந்துரை மீதான வாக்கெடுப்பு அடுத்த வாரம் பிரேசில் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
இது குறித்து பேசிய ஜெய்ர் போல்சொனாரோ கூறியதாவது, இந்த விசாரணையை ஒரு நகைச்சுவை என்றும் அரசியல் ரீதியாக ஆதாயம் தேடுவதற்கே இந்த விசாரணை நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
உலக நாடுகள் அனைத்தும் காரோணவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ அவர்களோ கொரோனா தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்களையே முன் வைத்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் மீது கொலை உள்பட 13 வழக்குகள் தொடர தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.