கனடாவில் அரசியல் தஞ்சம் புகுந்த மியான்மார் அழகுராணி!
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களை விமர்சித்த அந்நாட்டு அழகுராணி ( Han Lay) , கனடாவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்.
23 வயதான தாவ் நந்தார் ஆங் எனும் இந்த யுவதி, ஹான் லே ( Han Lay) எனவும் அழைக்கப்படுகிறார். 2020 ஆம் ஆண்டு மிஸ் கிராண்ட் மியன்மார் அழகுராணியாக முடிசூட்டப்பட்டவர். 2021 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் கிராண்ட் இன்டர்நெஷனல் அழகுராணி போட்டியில் தாய்லாந்து சார்பாக அவர் ( Han Lay) பங்குபற்றினார்.
மிஸ் கிராண்ட் இன்டர்நெஷனல் போட்டி
மியன்மார் இராணுவ ஆட்சியை ஹான் லே விமர்சித்து வந்தார். மியன்மாரின் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, ஒரு மாதத்தில் மிஸ் கிராண்ட் இன்டர்நெஷனல் போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது.
இப்போட்டி மேடையையும் மியன்மார் இராணுவப் புரட்சியை விமர்சிப்பதற்கு ஹான் லே பயன்படுத்திக் கொண்டார். நிகவில் அவர் கூறுகையில்,
‘உலகிலுள்ள ஒவ்வொரு பிரஜைகளும் அவர்களின் நாட்டின் சுபீட்சத்தையும் அமைதியான சூழலையும் விரும்புகின்றனர். இன்று நான் இந்த மேடையில் இருக்கும்போது, எனது மியன்மார் நாட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். தமது உயிரை இழந்த அனைத்து மக்களுக்காககவும் நான் வருந்துகிறேன்’ எனக் கூறி கண்ணீர்சிந்தினார் ஹான் லே ( Han Lay).
அதையடுத்து, அவரை கைது செய்வதற்கு தாய்லாந்து அதிகாரிகள் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தனர். ஆனால், மியன்மாருக்குத் திரும்பாமல் அவர், தாய்லாந்திலேயே அவர் ( Han Lay) தங்கியிருந்தார். தாய்லாந்தில் தங்கியிருக்கும் காலத்தை நீடித்துக் கொள்வதற்காக அவர் தாய்லாந்திலிருந்து வெளியேறி மீண்டும் வர வேண்டியிருந்தது.
இந்நிலையில், வியட்நாமுக்குச் சென்ற அவர், கடந்த 21 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்துக்கு திரும்பியபோது தாய்லாந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் ( Han Lay) தடுக்கப்பட்டார்.
பிடிவிறாந்து
தனக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தாய்லாந்துக்குள் நுழைவதற்கு தன்னை தாய்லாந்து அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் இதனால் பேங்கொக் விமான நிலையத்தில் தான் நிர்க்கதியாக உள்ளதாகவும் ஹான் லே ( Han Lay) கூறியிருந்தார்.
அதோடு ஐ.நா. அதிகாரிகளின் உதவியையும் அவர் நாடியிருந்தார். மியன்மாருக்கு ஹான் லே ( Han Lay) திருப்பி அனுப்பப்பட்டால், அவர் கைது செய்யப்பட்டு, கடுமையான தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தாய்லாந்து கிளையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் ஹான் லே ( Han Lay)கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.