இராணுவ ஆட்சி அமலுக்குப் பின் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆங் சாங் சூகி
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் திகதி முதல் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை ராணுவம் கைது செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர் வீட்டுக்காவலில் உள்ளார். இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளை பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 800- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இராணுவ கட்டுப்பாட்டில் வீட்டுக்காவலில் உள்ள ஆங் சாங் சூகியின் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அந்நாட்டு இராணுவ தளபதி மின் அங் ஹலிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 16 வாரங்கள் வீட்டுச்சிறையில் உள்ள ஆங் சாங் சூகி முதல்முறையாக பொதுவெளியில் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக கடந்த பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் சூகி கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் இருந்து வருகிறார். கைது செய்யப்பட்ட பின்னர் ஆங் சாங் சூகியின் நிலை என்ன ஆனது என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன.
ஆனால், கைது செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக நீதிமன்ற விசாரணைக்கு காணொலி காட்சி மூலம் ஆஜரான ஆங் சாங் சூகி 'மக்களின் ஆதரவு உள்ளவரை தனது தேசிய லீக் ஜனநாயக கட்சியும் இருக்கும்’ என்று கூறினார். இந்த சம்பவம் மியான்மர் அரசியலில் பரபரப்பாகியுள்ளது..