கனடா எல்லைக்குள் புகுந்த மர்ம நபர்; சோதனையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி!
கடந்த மார்ச் 31ஆம் தேதி JohnWright எனும் அமெரிக்கர், கனடா எல்லைக்குள் நுழைந்த நிலையில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபரை கைது செய்த கனேடிய பொலிஸார் JohnWright உடைமைகளை சோதனையிட்ட போது பொலிஸார்ருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் குறித்த நபர் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தது மட்டுமின்றி, குண்டுகள் நிரப்பப்பட்ட 3 துப்பாக்கிகள் மற்றும் stun gun ஒன்றும் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின் கனடாவுக்கு வந்த கனேடிய பெண் ஒருவருடன், cab ஒன்றில் ஏறி கனடாவுக்குள் JohnWright நுழைந்துள்ளார்.
இதனையடுத்து ஆயுதங்களுடன் நாட்டுக்குள் நுழைந்த ஒருவரை அடையாளம் கண்டு, விரைவாக அவரைக் கைது செய்ததோடு, கனேடியர்களை அச்சுறுத்தல் ஒன்றில் இருந்து காப்பாற்றியுள்ள பொலிஸாரின் பணி பாராட்டத்தக்கது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கனடாவுக்குள் நுழைந்த அந்நபரை கைது செய்தது எப்படி என்பது தொடர்பாக விபரங்களை வெளியிடாத காவல்துறையினர் அதிநவீன தொழில்நுட்பம் ஒன்றைப் பயன்படுத்தி அவரைக் கைது செய்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.