பாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு நரேந்திர மோடி வாழ்த்து!
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான்(Imran Khan) அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது.
இதனால், இம்ரான்கானின்(Imran Khan) அரசு கவிழ்ந்ததையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் ஷெரீப் (Shabash Sharif)புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து, பாகிஸ்தானின் 23வது புதிய பிரதமராக அவர் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
Congratulations to H. E. Mian Muhammad Shehbaz Sharif on his election as the Prime Minister of Pakistan. India desires peace and stability in a region free of terror, so that we can focus on our development challenges and ensure the well-being and prosperity of our people.
— Narendra Modi (@narendramodi) April 11, 2022
இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஷ் ஷெரீப்பிற்கு(Shabash Sharif) இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஷ் ஷெரீப்பிற்கு(Shabash Sharif) வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயங்கரவாதம் இல்லாத, அமைதியான, நிலைத்தன்மை கொண்ட பிராந்தியத்தை இந்தியா விரும்புகிறது.
ஆகையால், நமது வளர்ச்சிக்கான சவால்களை கவனத்தில் கொண்டு நமது மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வளர்ச்சியை உறுதிபடுத்துவோம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.