நாசா படைத்த சாதனை; விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
உலகின் மிகப்பெரிய ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி செயற்கைக்கோளை,அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உருவாக்கியது.
பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது.
இது சுமார் 10 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.74,000 கோடி) மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இந்தத் தொலைநோக்கி கடந்த டிசம்பா் 25-ஆம் தேதி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் அது கடந்த திங்கள்கிழமை அன்று இலக்கை அடைந்தது.
இந்நிலையில், பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவைக் கடந்து அதன் இறுதி சுற்றுவட்டப் பாதையை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிச் சென்றடைந்தது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ‘எல் 2’ என்ற சுற்றுவட்டப் பாதையில் அது சுற்றிவரும். பிரபஞ்சத்தின் ஆரம்பகால ரகசியத்தை இத்தொலைநோக்கி வெளிக்கொண்டுவரும் என நம்பும் விஞ்ஞானிகளுக்கு இது மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஜூலை மாதத்திலிருந்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் தரவுகள் கிடைக்கக்கூடும் என நாசா அறிவித்துள்ளது.