நாஜி முகாமில் பணியாற்றிய மூதாட்டிக்கு ஜேர்மனியில் சிறைத் தண்டனை விதிப்பு
ஜேர்மனியில் நாஜி முகாம்களில் பலரது மரணத்திற்கு காரணமானதாக கூறி 97 வயது மூதாட்டிக்கு தற்போது சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஹிட்லரின் ஜேர்மானிய நாஜி அரசு போலந்தின் தென்பகுதியில் ஆஸ்விட்ச் என்கிற சிறிய கிராமத்தில் ராணுவ முகாமைத் திறந்தது. அதனை தங்களால் பிடிக்கப்படும் எதிரி நாட்டவர்களை அடிமைகளைப் போல் நடத்தி வேலை வாங்கவும், சித்ரவதை செய்யவும் பயன்படுத்தினர்.
இந்த நிலையில், நாஜி முகாம்களில் நடந்த படுகொலைகள் தொடர்பாக வழக்குகள் அவ்வப்போது நடத்தப்பட்டு, ஜேர்மனியில் அதற்கு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நாஜி முகாமில் 1943 முதல் 1945 வரை தட்டச்சு செயலராக பணிபுரிந்த 97 வயதான இம்கார்ட் ஃபியூஷ்னர் என்பவர், அங்கு நடந்த 10,000 கொலைகளுக்கு உடந்தையாக இருந்தார் என்று கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், விசாரணையின் முடிவில் நீதிமன்றதால் இம்கார்ட் ஃபியூஷ்னருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முகாமில் பணிபுரியும்போது இம்கார்ட் தனது பதின் பருவத்தில் இருந்ததால், சிறார் தண்டனை சட்டப்படி அவருக்கு குறைந்த சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.