நேபாளத்தை விடாது துரத்தும் கொரோனா..ஒரே நாளில் 7,220 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,220- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 185- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,531- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 7,135- பேர் குணம் அடைந்துள்ளனர்.
தொற்று பாதிப்புடன் 1.15 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு உயர்வால் அடுத்த சில நாட்களில் சுகாதார நெருக்கடி நிலையை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு சுகாதார நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.