கனடாவை கடுமையாக சாடிய இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகூ கனடா உள்ளிட்ட பல நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இன்று காலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உரையாற்றியபோது அவர் இவ்வாறு விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.
இந்த உரையின் போது பல நாடுகளின் தூதர்கள் இஸ்ரேலை எதிர்க்கும் நோக்கில் மண்டபத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.
பாலஸ்தீன அரசை அங்கீகரித்த கனடா போன்ற நாடுகளின் நடவடிக்க அவமானகரமான முடிவு என நெதன்யாகூ தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் யூதர்களுக்கு எதிரான தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் கடும் குண்டுவீச்சு, பசிபிக்கும் பொதுமக்களுக்கு உணவுக் குறைபாடு, மேலும் சமீபத்தில் கத்தாரில் ஹமாஸ் பேச்சுவார்த்தை நடத்துவோரின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் காரணமாக இஸ்ரேல் உலகளவில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.