சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வௌவால் கொரோனா வைரஸ்
சீனாவில் புதிய வௌவால் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப் புதிய வைரஸ் காரணமாக மீண்டுமொரு வைரஸ் தொற்று நோய் பரவல் ஏற்படும் கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வௌவால் கொரோனா வைரஸ்
HKU5-CoV-2 என பெயரிடப்பட்ட இந்த வைரஸ், COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸான SARS-CoV-2 ஐப் போன்றது என தெரிவிக்கப்படுகிறது.
HKU5-CoV-2 மனிதனிலிருந்து மனிதனுக்கு அல்லது குறுக்கு-இன பரவலுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வில், HKU5-CoV-2 மனித செல்கள் மற்றும் நுரையீரல் மற்றும் குடல் திசுக்களைப் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
குவாங்சோ அறிவியல் அகாடமி, வுஹான் பல்கலைக்கழகம் மற்றும் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களினால் குறித்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.