பிரிட்டன் செல்வோருக்கு இன்றுமுதல் புதிய பயணக்கட்டுப்பாடுகள்
இன்று முதல் பிரிட்டனின் கொரோனா பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் நிலையில், பிரிட்டன் அரசு, பச்சை பட்டியலில் புதிதாக 7 நாடுகளை இணைத்துள்ள அதேவேளை , சிவப்பு பட்டியலிலும் இரு நாடுகள் இணைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பச்சை பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கும், டென்மார்க், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா லிதுவேனியா, அசோர்ஸ் மற்றும் லிச்சென்ஸ்டீன் போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் செல்லும் மக்கள் இனிமேல் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என கூறப்படுகின்றது.
எனினும் சிவப்புப் பட்டியலில் புதியதாக இணைக்கப்பட்டிருக்கும் தாய்லாந்து, மாண்டினீக்ரோவிலிருந்து வரும் மக்கள், அரசு அங்கீகரித்த ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், பிரிட்டன் வரும் மக்கள் கட்டாயமாக ஒரு முறையாவது கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை , தற்போது பிரிட்டனின் பயண பட்டியல்கள், மூன்று வாரங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.