நியூயார்கில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் துப்பாக்கிச்சூடு!
அமெரிக்காவில் நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சுரங்க ரெயில் பாதையில், உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும், துப்பாக்கிச்சூடு யார் நடத்தியது என்ற விவரம் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. காலை நேரம் என்பதால், பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.
துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்தவர்கள் சிலர் ரத்த காயங்களுடன் வெளியே செல்வதையும் அவர்களுக்கு அங்கிருந்த சக பயணிகள் உதவி அளித்து வரும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளன.
நியூயார்க் காவல்துறை வெளியிட்டுள்ள டுவிட் பதிவில்
“விசாரணை நடைபெற்று வருவதால் புரூக்ளின் 4-வது அவென்யூ பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சுற்றுவட்டார பகுதிகளில் பயண தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெடிபொருட்கள் கண்டறியப்பட்டதாக சில செய்திகள் வெளியான நிலையில், செயல்பாட்டில் உள்ள வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று நியூயார்க் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது பயங்கரவாத செயலாக இருக்குமா? என்பதை இப்போதைக்கு உறுதிப்படுத்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.