80 ஆண்டுகள் பிரிந்திருந்த தாய்-சேயின் பாசப் பிணைப்பு
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் 80 ஆண்டுகளுக்கு பின்னர் தனது மகளை தாய் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.
எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த தனது சிசுவை தத்து கொடுத்த பெண், தற்பொழுது தனது மகளை சந்தித்துள்ளார்.
1939ம் ஆண்டில் யூத யுவதியான கெர்டா கோல் தனது சொந்த நாடான ஆஸ்திரியாவில் தப்பித்து இங்கிலாந்தை சென்றடைந்தார்.
18 வயதான கோல், 1942ம் ஆண்டில் சோனியா கிறிஸ்ட் என்ற மகளை ஈன்றெடுத்தார். பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் கோல், தனது மகளை தத்து கொடுத்தார்.
இந்த தாயும் மகளும் கடந்த எண்பது ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவோ அல்லது தொடர்புகொள்ளவோ இல்லை.
இந்த நிலையில் சர்வதேச அன்னையர் தினத்தில் சிறந்த பரிசாக தனது மகளை நீண்ட இடைவெளியின் பின்னர் பார்க்க கிடைத்தமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாக 98 வயதான கோல் தெரிவிக்கின்றார்.
நீண்ட காலமாக தேடி இறுதியில் கனடாவின் வயோதிபர் பராமரிப்பு நிலையமொன்றில் தாயை கண்டு பிடிக்க முடிந்தது எனவும், தாயை கண்டு பிடிப்பதற்கு தமது மகன் உதவியதாகவும் கோலின் மகள் சொனியா கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட இடைவெளியின் பின்னர் சந்தித்த தாயும் மகளும் ஆட்டம் பாட்டம் என கடந்த கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.