கனடாவில் கடையில் நின்றுகொண்டிருந்த புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!
கனடாவில் மருந்து வாங்குவதற்காக கடையில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, முன் பின் தெரியாத மற்றொரு பெண் திடீரென கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்தது 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.
உயிரிழந்த Rosemarie “Kim” Junor (28) என்ற அந்த பெண்ணுக்கு சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சமீபத்தில் திருமணம் ஆகியிருந்தது.
வீடு ஒன்றை வாங்கி, புதிதாக தம்பதியராக குடிபுகும் ஆசையில் இருந்த Rosemarieயின் திருமண வாழ்வு, தொடங்கி சிறிது காலத்திலேயே முடிந்துபோனது. Rosemarieயை கத்தியால் குத்தியதாக Rohinie Bisesar (40) என்ற பெண் கைது செய்யப்பட்டார். ஆனால், Rohinieக்கு மன நல பாதிப்பு இருந்ததால்தான் அவர் Rosemarieயைக் கொன்றார் என்றும், அதனால், அந்த குற்றச்செயலுக்கு அவர் காரணம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
இதனையடுத்து போதைப்பொருள் அடிமைத்தனம் மற்றும் மன நல மையம் ஒன்றில் இருந்து வருகிறார் Rohinie. சென்ற வாரம், Rohinieயின் சட்டத்தரணியான Marcus Bornfreund, தன் கட்சிக்காரரான Rohinieக்கு conditional discharge என்ற ஆணையை பிறப்பிக்குமாறு வாதிட்டார். Conditional discharge என்பது, குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மீண்டும் மற்றொரு குற்றச்செயலை செய்தாலன்றி அவரை தண்டிக்கக்கூடாது என்று கூறும் ஒரு நீதிமன்ற ஆணையாகும்.
தன் கட்சிக்காரர், மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கும் வரை மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடும் அபாயம் குறைவே என்றும், ஆகவே அவரை மீண்டும் சமுதாயத்திற்குள் அனுமதிக்கவேண்டும் என்றும் Marcus வாதிட்டார். எனினும் , இவ்வளவு காலம் மன நல காப்பகம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்துவிட்டு, முதன்முறையாக Rohinie சமுதாயத்திற்குள் செல்லும்போது, அவரது மன நலம் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற வாதத்தை முன்வைத்தார் மன நல மருத்துவரான Dr. Georgia Walton. அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழுவில் ஒருவரான Michael Feindel, உண்மையாகவே Rohinie சமுதாயத்திற்குள் செல்லும்போது என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது.
இந்த வழக்கு மக்கள் நன்கு அறிந்த வழக்கு, மக்கள் Rohinieயின் முகத்தைப் பல முறை செய்திகளில் பார்த்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, யாராவது Rohinieயிடம் ஏதாவது சொல்லப்போக, அவர் மீண்டும் பதற்றமடைந்து பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார் அவர். ஆகவே, Rohinieக்கு conditional discharge கொடுக்க முடியாது என நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துவிட்டது.
இதேவேளை இந்த பாதக செயலை செய்த Rohinie ஒரு MBA பட்டதாரி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.