மீண்டும் களைகட்டும் நயாகரா பிராந்தியம்: காரணம் இதுதன்
கனடாவில் திங்கள்கிழமை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் நயாகரா பிராந்தியத்தில் உற்சாகம் களைகட்ட தொடங்கியுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டதன் 14 நாட்களுக்கு பின்னர் மட்டுமே அமெரிக்கர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு கனடாவில் அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் ஒன்ராறியோவின் எல்லைப் பகுதியான நயாகராவில் கட்டுப்பாடுகள் தளர்வு என்பது மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்துள்ளது.
நீண்ட 17 மாதங்களுக்கு பின்னர் நயாகரா பிராந்தியம் களைகட்டுவதாகவும், அமெரிக்க பயணிகளை வரவேற்க காத்திருப்பதாகவும் அப்பகுதி வணிக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நயாகராவில் வருகைதரும் சுற்றுலா பயணிகளில் 30% பேர்கள் அமெரிக்கர்கள் என்றே கூறப்படுகிறது.
தற்போதைய கட்டுப்பாடுகள் தளர்வு என்பது சில காலம் நீடிக்க வேண்டும் என்றே பலரும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.