நயகராவில் மூவர்ண கொடி! இந்தியாவுக்கு ஆதரவாக கனடாவின் நெகிழ்ச்சி செயல்
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவுக்கு ஆதரவாக நயகராவில் மூவர்ண கொடியின் நிறங்களை ஒளிரவைத்துள்ளது தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது கனடா.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.
வடமாநிலங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பலர் உயிரிழந்து வருகின்றனர், இதனாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு தங்களால் முயன்ற உதவிகளை அறிவித்து வருகின்றன, சமீபத்தில் கூட இந்தியாவுக்கு 10 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக கனடா அறிவித்தது.
இதற்கிடையே நயகரா அருவில் இந்திய தேசிய கொடியின் மூர்வண நிறத்தை ஒளிரச்செய்து தன்னுடைய ஆதரவை மேலும் தெரிவித்துள்ளது கனடா.
#StayStrongIndia என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
India is currently facing a surge in cases and losses of life resulting from COVID-19. In a display of solidarity and hope for India, Niagara Falls will be illuminated tonight from 9:30 to 10pm in orange, white and green, the colours of the flag of India. #StayStrongIndia pic.twitter.com/o0IIxxnCrk
— Niagara Parks (@NiagaraParks) April 28, 2021