ஒன்ராறியோ பள்ளி வாரியத்தில் 2 மில்லியன் டொலர் மொசடி
ஒன்ராறியோ பள்ளி வாரியத்தில் 2 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தில் மூவர் விசாரணையை எதிர்கொள்ள இருப்பதாக நயாகரா பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் இருவர் ஒன்ராறியோ பள்ளி வாரியத்தில் பணியாற்றியவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நயாகரா முன்னாள் மாவட்ட பள்ளி வாரிய தலைமை தகவல் அதிகாரி டினோ மெய்ல் என்று நயாகரா பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
மெய்ல் மற்றும் இன்னொரு ஊழியரும் சேர்ந்தே திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 2003 முதல் 2019 வரையான காலகட்டத்தில் மொத்தம் 2.1 மில்லியன் டொலர் தொகை இவர்கள் மோசடி செய்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் தற்போது ஊழல் வழக்கு பதியப்பட்டுள்ளது. மட்டுமின்றி, மூன்றாவது குற்றவாளியாக டினோ மெய்ல் என்பவரின் மனைவியை முறைகேடாக சொத்து சேர்த்ததன் பேரில் இந்த வழக்கில் இணைத்துள்ளனர்.