அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக நீரா தாண்டன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் (Joe Biden) மூத்த ஆலோசகராக நீரா தாண்டன் (Neera Tanden) நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதி குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை (Neera Tanden) நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்தார்.
இவரது நியமனத்துக்கு செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும். ஆனால் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீரா தாண்டனை நியமிப்பதற்கு செனட் சபை எம்.பி. ஜோ மேன்ச்சின் (MP Joe Manchin) எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன் காரணமாக நீரா தாண்டன் (Neera Tanden) நியமனத்தில் சிக்கல் எழுந்தது. இருப்பினும் வெள்ளை மாளிகையின் நிர்வாக குழுவில் நீரா தாண்டன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிபரின் மூத்த ஆலோசகராக நீரா தாண்டன் (Neera Tanden) நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின்(Obama) மூத்த ஆலோசகராக நீரா தாண்டன் (Nira Tandon) செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.