கொரோனா விதிகளை மீறியதற்காக ஒருவருக்கு கூட அபராதம் விதிக்கப்படாத கனேடிய நகரம்
கியூபெக்கில், ஒருவர் கூட கொரோனா விதிகளை மீறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கனடாவுக்கு வரும் பயணிகள், ஹொட்டல் ஒன்றில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
பிப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் கனடாவுக்கு விமானம் வாயிலாக வரும் பெரும்பாலான பயணிகள், தங்களை அரசு அனுமதித்துள்ள ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்திக்கொண்டு, கனடாவில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டது.
யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளதோ, அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று தங்களை மீதமுள்ள 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.
கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தவர்கள், அரசு அனுமதித்துள்ள ஒரு இடத்தில் தங்கள் தனிமைப்படுத்தலைத் தொடரவேண்டும்.
கனடாவில், இந்த விதிகளை மீறியதற்காக மார்ச் மாதம் முதல் 1,098 பேருக்கு பராதம் விதிக்கப்பட்டுள்ளது, 15 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், கியூபெக்கில் மட்டும் இதுவரை கொரோனா விதிகளை மீறியதாக ஒருவருக்கு கூட அபராதம் விதிக்கப்படவில்லை, அதாவது, ஒருவர் கூட விதிகளை மீறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.