இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக் கூடாது....அமெரிக்கா எம்பிக்கள் வலியுறுத்தல்
ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை பாதுகாப்பு அமைப்புகளை கொள்முதல் செய்யும் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கூடாது என அமெரிக்காவின் சில முக்கிய எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியா அரசானது ரஷ்யாவிடமிருந்து இருந்து எஸ் 400 ரக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்க கடந்த 2018ஆம் ஆண்டே இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டதை சுட்டி காட்டியுள்ளனர். மேலும் இதற்கான தொகையானது 2025ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கு இந்தியா கொடுத்து முடிக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டு குழப்பத்தை விளைவித்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
எனவே ரஷியா மீதும் அந்நாட்டுடன் ஒப்பந்தங்கள் செய்யும் நாடுகள் மீதும் 2017ம் ஆண்டு இயற்றப்பட்ட அமெரிக்க எதிரிகள் மீதான பொருளாதார சட்டம் மூலம் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஆயுதங்களை வாங்கும் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்பதால் அது கூடாது என அமெரிக்கா எம்பிக்கள் சிலர் அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த ஆண்டு 3.4 பில்லியன் டாலர் அளவிற்கு ஆயுதங்கள் வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதையும் எம்பிக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.