யாரும் ராணுவ சீருடை அணிய முடியாது; கடும் கட்டளை பிறப்பித்த பிரித்தானிய மகாராணி
இளவரசர் பிலிப்பின் இறுதி நிகழ்வில் யாரும் ராணுவ சீருடை அணிய முடியாது என பிரித்தானிய மகாராணி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமை இளவரசர் பிலிப் தனது 99வது வயதில் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அரச குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்கின்போது, பராம்பரிய நிகழ்வாக குடும்பத்தில் உள்ள ஒருவர் இராணுவ உடை அணிந்து செல்வார். இந்த நிலையில் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது ஹாரி அல்லது 61 வயதான ஆண்ட்ரூ ஆகியோரில் ஒருவர்தான் இராணுவ ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், ஹாரி ஆப்கானிஸ்தான் போரின்போது பிரித்தானிய படையுடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அதேபோல் ஆண்ட்ரூ 1982ம் ஆண்டு போக்லாந்து தீவு பிரச்சினையின்போது பணிபுரிந்தவர்.
ஆனால் இவர்கள் இருவருமே பெரும் சர்சையில் சிக்கிய நபர்கள். ஆண்ரூ அமெரிக்காவில் உள்ள பெரும் செல்வந்தர் ஒருவரின் தனித் தீவில் பெண்களுடன் அடித்த கும்மாளம் புகைப்படம் புகைப்படமாக வெளியே வந்து பெரும் சர்சையைக் கிளப்பியது. இதன் காரணமாக அன்று முதல் இன்றுவரை எந்த பொது நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளக் கூடாது என மகாராணியார் கட்டளையிட்டார்.
இந்த நிலையில் தற்போது ஹரி தனது மனைவி மெகானுடன் சேர்ந்து அரச குடும்பத்தையே இன வெறி குடும்பம் என்று தொலைக்காட்சி நிகழ்சியில் கூறினார். இதன் காரணமாக ஹரிக்கு ராணுவ உடையைக் கொடுக்க கூடாது என்றும் தானே அணிய வேண்டும் என்றும் அண்ரூ அடம் பிடித்தார்.
இதனால் யாருக்கு கொடுப்பது என்ற பெரும் சர்சை எழுந்த நிலையில் மகாராணி இரண்டாம் எலிசபெத் அதிரடி முடிவை எடுத்தார். அதாவது எவரும் ராணுவ உடை அணியத் தேவை இல்லை என்றும், அனைவரும் சாதாரண உடையில் வந்தால் போதும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை பல நூறு வருடங்களாக அரச குடும்பத்தில் இருந்து வரும் வழக்கத்தை மாற்றவேண்டிய கட்டாய சூழலில் அவர் இருப்பது மகாராணிக்கு பெரும் மன வருத்தத்தை கொடுப்பதாகவும் கூறப்படுகின்றது.